"ட்விட்டரை விட்டு களத்துக்கு வாருங்கள்" - எதிர்கட்சிகளுக்கு ஜே.பி.நட்டா சவால்!

Update: 2021-06-24 10:50 GMT

பா.ஜ.க கட்சியின் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய சியாமா பிரசாத் முகர்ஜியின் 68-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பா.ஜ.க சார்பில் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா எதிர்கட்சிகளை கடுமையாக குற்றம் சாட்டினார். குறிப்பாக, தடுப்பூசி குறித்து காங்கிரஸ் கட்சி தவறாக வழிநடத்துகிறது ஆனால் , காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மட்டும் அமைதியாக தடுப்பூசி போட்டு வருகின்றனர்.


இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஜே.பி.நட்டா "பா.ஜ.க வை தவிர பிற கட்சிகள் அனைத்தும் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளன. சில கட்சிகள் அவசர சிகிச்சை பிரிவில் கூட இருக்கின்றன. இந்த நாட்களில் எதிர்க்கட்சி தலைவர்களை மக்கள் மத்தியில் பார்க்க முடியவில்லை மாறாக, ட்விட்டர் தளத்திலும், செய்தியாளர் சந்திப்புகளிலும் தான் காண முடிகிறது. 


கொரோனா தடுப்பூசி தொடர்பாக காங்கிரஸ் கட்சி, மக்களை தவறாக வழிநடத்துகிறது. ஆனால் எந்தவொரு காங்கிரஸ் தலைவராவது, தடுப்பூசி போடவில்லை என்று கூறுகிறார்களா? அவர்கள் மட்டும் அமைதியாக தடுப்பூசியை போட்டு வருகிறார்கள்." என்று அவர் விமர்சித்தார்.

மேலும் சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தையொட்டி, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் "சியாமா பிரசாத் முகர்ஜியின் உன்னத இலட்சியங்கள், வளமான எண்ணங்கள் மற்றும் மக்களுக்கு சேவை செய்வதற்கான அர்ப்பணிப்பு ஆகியவை தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும். தேசிய ஒருங்கிணைப்புக்கான அவரது முயற்சிகள் ஒருபோதும் மறக்கப்படாது" என்று பதிவிட்டிருந்தார்.

Tags:    

Similar News