'ஜெய்ஹிந்த்' என்ற தேசத்தின் தாரக மந்திரத்தை வேண்டுமென்றே இழிவுப்படுத்தி வருகிறது தி.மு.க' - வெள்ளூர் இப்ராஹிம் கடும் குற்றச்சாட்டு!

Update: 2021-07-13 08:16 GMT

தமிழ்நாடு பா.ஜ.க வின் மைனாரிட்டி மோர்ச்சாவின் தேசிய செயலாளராக விளங்கி வருபவர் வெள்ளூர் இப்ராஹிம். இவர் நேற்று, நீலகிரி மாவட்ட பா.ஜ.க தொண்டர்கள் சார்பில்  ஊட்டியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அந்த ஆலோசனை கூட்டத்தில், சிறுபான்மை மக்களின் வளர்ச்சிக்காக நிர்வாகிகள் முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்த ஆலோசனைகளை அவர் வழங்கினார். மேலும் இந்த கூட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த தேவைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இந்த கூட்டத்தில் பேசிய பின்னர் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் "தி.மு.க. கட்சி சமீப காலமாக தொடர்ந்து தேச விரோதத்தை ஊக்குவித்து வருகிறது. மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என்று தி.மு.க. வினர் சொல்லி மக்களை திசை திருப்புவதும் மற்றும்  'ஜெய்ஹிந்த்' என்ற தேசத்தின் தாரக மந்திரத்தை இழிவுப்படுத்தி தி.மு.க கூட்டணி சட்டமன்றத்தில் பேசி வருவதையும் பா.ஜ.க கவனித்து கொண்டு வருகிறது.


தி.மு.க வெற்றி பெற்றால் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு, 5 ரூபாய் குறைப்போம் என்று அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தனர், அது மட்டுமின்றி தி.மு.க வின் தேர்தல் வாக்குறுதியிலும்  இதை கூறியுள்ளது. தி.மு.க வாக்குறுதி கொடுத்ததை போல் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் மாறாக  மாநில அரசு வரியை உயர்த்தி விட்டு, மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம். பா.ஜ.க கட்சியை பொறுத்தவரை ஒரே மக்கள், ஒரே தேசம், ஒரே சட்டம் என்று அனைவரும் பாரத தாயின் பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்று கருதுகிறது." என்று இப்ராஹிம் கூறினார்.

Tags:    

Similar News