"நீங்க முன்னாடி பா.ஜ.க கூட கூட்டணி வைத்திருந்தபோது எதை தூக்கி பிடித்தீர்கள்?" ஸ்டாலினை நோக்கி சராமரி கேள்வி எழுப்பி எடப்பாடி!

Update: 2021-07-14 16:30 GMT

"முன்பு பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தபோது தி.மு.க'வினர் எதைத் தாங்கிக் கொண்டிருந்தனர்" என தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் விமர்சனத்திற்கு பதிலடி தரும் விதமாக முன்னாள் முதல்வர் எடப்பாடி கேள்வி எழுப்பியுள்ளார்.

"ஆட்சியை இழந்த பின்னும் பா.ஜ.க'வின் பாதம் தாங்கி அடிமை சேவகம் செய்யும் அ.தி.மு.க'வின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி" என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்ததற்கு இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பதிலடி தந்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "எங்களை பாதம் தாங்கிகள், பா.ஜ.க'வின் அடிமைகள் என்றெல்லாம் விமர்சித்துள்ளார் ஸ்டாலின். முன்பு பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகித்தபோது தி.மு.க'வினர் எதைத் தாங்கிக் கொண்டிருந்தனர் என திருப்பிக் கேட்க எங்களுக்கு ஒரு நொடி ஆகாது" என்று காட்டமாக பதிலளித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பது போல தி.மு.க'வினர் பிதற்றிக்கொள்கிறார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

Similar News