இனி இதை செய்தால் தலைமைக் கழகம் நடவடிக்கை எடுக்கும் : அறிக்கை விட்ட ஆர்.எஸ். பாரதி!

Update: 2021-07-18 11:15 GMT

"அனுமதியின்றி பேனர்கள் ஏதும் இனி வைக்கவே கூடாது" என்று மீண்டும் தி.மு.க-வில் இருந்து அறிக்கை வெளிவந்துள்ளது.

இதுதொடர்பாக தி.மு.க அமைப்புச் செயலாளர் எம்.பி ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் இன்னும் கூட ஆங்காங்கே கழகத்தினரும் - கழக நிர்வாகிகளும் பேனர்களை வைப்பது தொடர்கிறது.

பேனர் கலாச்சாரத்தால் மரணங்களும், விபத்துக்களும் நிகழ்ந்த நிலையில் - "எங்கள் கட்சியின் சார்பில் பேனர்கள் வைக்கமாட்டோம்" என்று முதன் முதலில் உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் தி.மு.க சார்பில் சத்தியப் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தது என்பதைக் கழகத்தினர் அனைவரும் அறிவீர்கள்.

ஆகவே அனுமதியின்றி பேனர்கள் ஏதும் இனி வைக்கவே கூடாது என்று கழகத்தினர் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். தி.மு.க தலைவர் ஸ்டாலினின் ஆணையை மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தலைமைக் கழகம் நடவடிக்கை எடுக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

Similar News