தீயசக்தி தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே தமிழ்நாட்டுக்கு பிரச்சினைதான் - சீறும் டி.டி.வி.தினகரன்!

Update: 2021-07-27 01:45 GMT

"தீயசக்தி தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே தமிழ்நாட்டுக்கு பிரச்சினையும் சேர்ந்து வந்துவிடுகிறது" என டி.டி.வி தினகரன் தி.மு.க விமர்சித்துள்ளார்.

இன்று அ.மமு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தின் ஜீவாதாரமாக விளங்கும் காவிரி நதிநீரில் நமக்குரிய பங்கினைத் தராமல் பல்வேறு காலக்கட்டங்களில் கர்நாடகா வஞ்சித்து வருகிறது. அதிலும் தீய சக்தியான தி.மு.க எப்போதெல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் காவிரியிலும் அதன் துணை ஆறுகளிலும் புதிய அணைகள் கட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் கர்நாடகா, இப்போதும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று அடம்பிடிக்கிறது.

இதனைக் கண்டித்து அ.ம.மு.க'வின் சார்பில் வருகிற ஆகஸ்ட் 6'ம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 11 மணி அளவில் தஞ்சாவூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது" என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News