"இரண்டாம் முறையாக அப்துல் கலாம் ஜனாதிபதி ஆவதை தி.மு.க தடுத்தது!" - அண்ணாமலை காட்டம்!

Update: 2021-07-27 15:15 GMT

"இரண்டாம் முறையாக அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் ஆவதை தி.மு.க தடுத்து விட்டது" என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வரலாற்றை நினைவுபடுத்தியுள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 6'ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதவது, "அப்துல்கலாம் தமிழ்நாட்டுக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர், விஞ்ஞானத்திற்கு பலம் சேர்த்தவர் என்றார். இரண்டாம் முறையாக அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் ஆவதை தி.மு.க தடுத்துவிட்டது" என்றார்.

மேலும் பேசிய அவர், "மறைந்த தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி 'கலாம் என்றால் கலகம்' என்று அப்துல் கலாமை கொச்சை படுத்தினார்' என வரலாற்று உண்மைகளை நினைவூட்டினார்.

Similar News