"அண்ணாமலை கூறுவது நகைச்சுவையாக உள்ளது" - சமாளித்து தப்பிக்கும் கனிமொழி !

Update: 2021-10-02 23:45 GMT

"தி.மு.க.வின் அடித்தளம் நன்றாக அமையவில்லை என்று மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறுவது நகைச்சுவையாக உள்ளது" என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் அரசியல் விமர்சனங்களுக்கு பதிலளிக்க இயலாமல் கனிமொழி சமாளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தீத்தாம்பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி கலந்து கொண்டார். 

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "ஆட்சியில் இருக்கும்போது எதையும் செய்யாத அ.தி.மு.க தற்போது தி.மு.க செய்யும் திட்டங்களை பார்த்து பயப்படுகின்றன. அந்த பயத்தின் வெளிப்பாடு காரணமாக தி.மு.க எதையும் செய்யவில்லை என்று கூறுகின்றன. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க செய்யாததை தி.மு.க ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து உள்ளார்" என்றார்.

மேலும் அண்ணாமலை பற்றி கூறிய அவர், "தி.மு.க.வின் அடித்தளம் நன்றாக அமையவில்லை என்று மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறுவது நகைச்சுவையாக உள்ளது" என்றார்.

அண்ணாமலை தமிழக பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து தி.மு.க'வின் அரசியலை மக்களுக்கு புரியும்படி எளிமையாக விளக்கி வருகிறார். பல இடங்களில் தி.மு.க எவ்வாறு மத்திய அரசின் திட்டங்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறது எனவும் விளக்கி வருகிறார். இதற்கு விளக்கமளிக்க இயலாமல் கனிமொழி சமாளித்து பேசியுள்ளார்.


Source - Maalai malar

Similar News