லக்னோவில் கேமரா புடைசூழ துடைப்பத்துடன் வலம் வந்த பிரியங்கா வதேரா - தொடரும் நாடகம் !

Update: 2021-10-09 11:00 GMT

லக்கிம்பூர் அரசியல் நாடகம் முடிந்ததையடுத்து அடுத்தபடியாக லக்னோ'வில் தலித்துக்கள் வாழும் பகுதியில் துடைப்பத்தை எடுத்து அரசியல் நாடகத்தை பிரியங்கா துவங்கியுள்ளார்.

மூன்று நாட்களுக்கு முன்பு உ.பி'யில் உள்ள சீதாபூர் விருந்தினர் மாளிகையின் தரையைத் துடைத்து அந்த வீடியோ'வை நாடு முழுவதும் அனைவர் பார்வையிலும் படும்படி விளம்பரப்படுத்தினர். மக்கள் அதனை பார்த்துவிட்டு கேலி செய்தனரே தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை. இந்நிலையில் நேற்று லக்னோ'வில் புகைப்படக்கலைஞர்கள் புடைசூழ ஒரு தலித்துக்கள் வாழும் பகுதிக்கு சென்று துடைப்பத்தை வைத்து பெருக்கும் படம் வெளிவந்துள்ளது.

மைதானத்தை சுத்தம் செய்வதில் பிரியங்கா காந்தியுடன் இன்னொரு பெண்ணும் இருந்தார், மற்றும் அவரது ஆதரவாளர்கள் 'பிரியங்கா காந்தி ஜிந்தாபாத்' என்று கோஷமிட்டனர். இந்தச் செயலின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்துக்கொண்ட காங்கிரஸ் கட்சியினரால் பிரியங்கா சூழப்பட்டிருந்தார், குறைந்தது 8 பேர் அதை தங்கள் தொலைபேசியில் படம் எடுத்தனர், சிலர் பிரியங்கா காந்தி வத்ராவை பின்னணியில் வைத்து செல்ஃபி எடுக்க முயன்று முண்டியடித்துக் கொண்டிருந்தனர்.


Source - Oplidia.com

Similar News