கோடிகளில் சம்பாரித்த சூர்யா கப்சிப் - உண்மையாக உதவிக்கரம் நீட்டிய ராகவா லாரன்ஸ் !

Update: 2021-11-16 08:45 GMT

பாதிக்கப்பட்ட மக்கள் கதை என கூறி படம் எடுத்து கோடி, கோடியாய் சம்பாதித்த நடிகர் சூர்யா செய்யாததை இயக்குனரும், நடிகருமான லாரன்ஸ் ராகவேந்திரா செய்துள்ளார்.

'ஜெய்பீம்' படத்தில் இருளர் இன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை படமாக்குகிறேன் என்ற பெயரில் நடிகர் சூர்யா படம் எடுத்தார். பின்னர் அதனை நல்ல லாபத்திற்கு அமேசோன் நிறுவனத்திற்கு விற்றுவிட்டு படத்தை பற்றி விளம்பரம் செய்ய துவங்கினார். பின்னர் படம் வெளிவந்து சர்ச்சைகள் சுழல துவங்கின. ஆனால் யாருடைய கதையை படமாக எடுத்தாரோ அவர்களுக்கு ஏதும் செய்யாமல் வெற்று அறிக்கைகள் மட்டும் வெளியிட்டார். பின்னர் ஒரு கோடி தருகிறேன் என நாடகம் வேறு ஆடினார், அந்த ஒரு கோடி பணம் வாங்கும் அறக்கட்டளை முகவரி கூட இன்னும் முறையாக பதியப்படவில்லை என பல சர்ச்சைகள் உலாவி வருகின்றன.

இதற்கிடையில் தமிழகத்தில் வட பகுதில் பெரும்பான்மை சமூகமாக வாழும் வன்னியர்களை வேறு சித்தரித்து தவறாக காண்பித்ததில் வன்னியர் சமூகத்தின் வெறுப்பையும் வாங்கி வைத்துக்கொண்டார்.

இப்படி கருத்து கூறுகிறேன், உதவி செய்கிறேன் என சூர்யா 'நடிகர்' அவதாரத்தை கேமரா பின்புறமும் செய்தார். ஆனால் படத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணாக வலம் வரும் நிஜ கதாபாத்திரமான பார்வதி என்றவருக்கு இதுவரை ஏதும் உதவிகள் செய்யவில்லை. அவர்கள் கதையை அவர்கள் அனுமதி இல்லாமல் எடுத்து சூர்யா கோடி கோடியாக சம்பாதித்தார்.

இந்நிலையில் நடன இயக்குனரும், இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தனது சொந்த பணத்தில் இருந்து அந்த பார்வதி குடும்பத்தினருக்கு வீடு கட்டிகொடுப்பதாக அறிவித்துள்ளார். அவர்களை நேரில் சென்றும் பார்த்துவிட்டு ஆறுதல் கூறி வந்துள்ளார். சம்பாதித்த சூர்யா கம்'மென இருக்கையில் சம்மந்தமே இல்லாத ராகவா லாரன்ஸ் உதவியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Source - 



 


Tags:    

Similar News