தரத்தோடு பேசும் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அவன், இவன் என பேசுவதுதான் மாண்புமிகுவா? - வானதி சீனிவாசன் பதிலடி!

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தனது பேட்டியின் போதும், கட்சி நிகழ்ச்சிகளிலும் சரி எதிர்க்கட்சியை விமர்சனம் செய்யும்போது மிகவும் நாகரீகமான முறையில் பேசுவார். ஆனால் தற்போது திமுக அமைச்சர் காந்தி மிகவும் நாகரீகத்தை மீறி அண்ணாமலை குறித்து பேசியுள்ள சம்பவம் அவரது அரசியல் முதிர்ச்சியின்மை காட்டுவதாக இருக்கிறது.

Update: 2021-12-16 12:49 GMT

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தனது பேட்டியின் போதும், கட்சி நிகழ்ச்சிகளிலும் சரி எதிர்க்கட்சியை விமர்சனம் செய்யும்போது மிகவும் நாகரீகமான முறையில் பேசுவார். ஆனால் தற்போது திமுக அமைச்சர் காந்தி மிகவும் நாகரீகத்தை மீறி அண்ணாமலை குறித்து பேசியுள்ள சம்பவம் அவரது அரசியல் முதிர்ச்சியின்மை காட்டுவதாக இருக்கிறது.

சமீபத்தில் பாஜக தலைவர் கே.அண்ணாமலை தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்று பேசியிருந்தார். இந்த கேள்வியை திமுக அமைச்சரான காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் மிகவும் ஒருமையில் பேசியுள்ளார். அண்ணாமலை ஒரு தலைவனா.. அவன், இவன் என பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த பேச்சுக்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன், கதிர் இணையதளத்தில் உள்ள வீடியோ ட்விட்டர் ஒன்றை ஷேர் செய்து சுட்டிக்காட்டியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள கருத்தில், பேசுபவர், தரத்தோடு பேசுகிறார். அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதை விட்டு அவன், இவன் என பேசும் இவர் மாண்புமிகு??? என்ற ஆச்சரிய குறியை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News