"செங்கல்லை வச்சு விளம்பரம் பண்ணவங்க ஒரு செங்கல்லை கூட நடவில்லை" - உதயநிதியை கலாய்த்த ஆர்.பி.உதயகுமார்

Update: 2022-01-14 00:30 GMT

"மதுரை எய்ம்ஸ் குறிப்பிட்டு செங்கல்லை வைத்து விளம்பரம் தேடிய தி.மு.க இதுவரைக்கும் ஒரு செங்கல்லை கூட நடவில்லை" என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.



மதுரை அரசு மருத்துவகல்லூரியில் முன்னாள் அமைச்சர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை தமிழகத்திற்கு தந்த பெருமை அ.தி.மு.க'வையே சாரும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு பெற்று தந்தது அ.தி.மு.க அரசே. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை குறிப்பிட்டு செங்கல்லை தூக்கி காண்பித்து விளம்பரம் தேடிய தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து இதுவரை ஒரு செங்கல்லை கூட நடவில்லை" என தெரிவித்தார்.



தேர்தல் பிரச்சாரத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை குறிப்பிட்டு உதயநிதி செங்கல்லை தூக்கி காண்பித்து பிரச்சாரத்தை மேற்கொண்டது குறிப்பிடதக்கது. மேலும் நேற்று தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்த நேரத்தில் தி.மு.க அரசின் சாதனையாக அதனை விளம்பரப்படுத்தியது குறிப்பிடதக்கது.


Source - Asianet NEWS

Similar News