கோவை மக்களே உஷார்: ரவுடிகளை வைத்து கலவரம் செய்ய தி.மு.க. தயாராகிவிட்டது: வேலுமணி திடுக்கிடும் தகவல்!

Update: 2022-02-15 06:40 GMT

ரவுடிகளை வைத்து கோவை முழுவதும் மிகப்பெரிய கலவரத்தை உண்டாக்க திமுக முயற்சி செய்துள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி பரபரப்பான தகவலை கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கமிஷ்னரை சந்தித்து புகார் மனுவை அளித்தனர். அதன்பின்னர் வேலுமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வெளி மாவட்டங்களில் இருந்து ரவுடிகள் கோவைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் ஆவார். இவர்களை வைத்து மாவட்டத்தை மிகப்பெரிய கவலர பூமியாக்க திமுகவினர் திட்டம் போட்டுள்ளனர்.


இதற்காக ஒவ்வொரு வார்டில் ஒரு ரவுடியை நியமித்து மாற்று கட்சியினரை தாக்கி வருகின்றனர். தேர்தல் விதிகளை மீறி 150 கன்டெய்னர்களில் பரிசுப் பொருட்களுடன் கோவையில் நுழைந்து ஒவ்வொரு வீட்டுக்கும் வினியோகம் செய்து வருகின்றனர். இது போன்று பரிசுப் பொருட்களை ஏற்றி வந்த ஒரு வாகனத்தை அதிமுகவினர் சிறைப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் கட்சி நிர்வாகியான கல்யாணசுந்தரம்மீது பொய் வழக்கை பதிவு செய்துள்ளனர். அவருடன் சில தொண்டர்களையும் பிடித்து மிகவும் கண்ணியமற்ற முறையில் நடத்தியுள்ளனர்.

தேர்தல் விதிகளை மீறி திமுகவினர் அராஜகப்போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். நீதிமன்றம் சில வழிமுறைகளை வகுத்தது. ஆனால் அதனை திமுகவினர் மீறியுள்ளனர். உடனடியாக வெளியூர்களில் இருந்து வந்த ரவுடிகளை போலீசார் கைது செய்து கலவரத்தை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News