பேப்பரில் இயங்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம்! அடிக்கடி மின்வெட்டு: ஜெனரேட்டர் வாங்குங்கள்! - அண்ணாமலை எச்சரிக்கை!

Update: 2022-03-16 11:11 GMT

தமிழகத்தில் இனி வரும் காலங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் என்றும் இனிமேல் வீடுகளில் மக்கள ஜெனரேட்டர்களை வாங்கி வைப்பது நல்லது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை செய்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பி.ஜி.ஆர். எனர்ஜி என்கின்ற நிறுவனம் பேப்பரிலேயே இயங்கி வருகிறது. அந்த நிறுனத்திடம் டான்ஜெக்டோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. எவ்வித தகுதியும் இல்லாத இந்நிறுவனத்திற்கு ரூ.4,442 கோடி ஒப்பந்தத்தை தமிழக மின்சார வாரியம் அளித்துள்ளது.

அந்நிறுவனத்திற்கு கோபாலபுரத்தில் தொடர்பு இருக்கின்ற காரணத்தினாலேயே பி.ஜி.ஆர். நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும். அனைத்து மக்களும் தங்களின் வீடுகளில் யு.பி.எஸ்., அல்லது ஜெனரேட்டர்களை வாங்கி வைப்பது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News