கட்சியை ஏன் வளர்க்கிறாய்! பா.ஜ.க. நிர்வாகியை சரமாரியாக வெட்டிய வி.சி.க.வினர்!

Update: 2022-04-04 11:22 GMT

கடலூர் மாவட்டத்தில் கட்சியை வளர்க்கும் காரணத்தினால் பாஜக நிர்வாகியை விசிகவினர் சிலர் சரமாரியாக வெட்டியுள்ளதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் கிழக்கு மாவட்ட ஊரக வளர்ச்சிப் பிரிவு மாவட்ட செயலாளராக பணியாற்றி வருபவர் பாபு. இவர் கடந்த 2ம் தேதி இரவு சுமார் 8 மணியளவில் வடலூர், பண்ருட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது போதையில் 3 இளைஞர்கள் சாலையோரம் உள்ள கடையில் தகராறு செய்துள்ளனர். இதனை கவனித்த பாபு என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு விசிகவினர் நீதான் எங்கள் ஊரில் பாஜகவை வளர்க்கிறாய் என்று சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் பாபுவின் காது வெட்டப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி கை வெட்டப்பட்டு இனிமேல் உபயோகப்படாது என்ற நிலையில் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது போன்று தொடர்ந்து கடலூர் மாவட்டங்களில் கஞ்சா அதிகரித்து தற்போது கொலை செய்யும் அளவிற்கு விசிகவினர் இறங்கியுள்ளனர். எனவே ஆரம்பித்திலேயே சட்டம் ஒழுங்கை திமுக அரசு நிலை நாட்ட இது போன்றவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த பொதுமக்களின் கருத்தாகும்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News