தமிழகத்தில் அணில் வேலையை காட்டுகிறது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

Update: 2022-04-22 12:11 GMT

அடிக்கடி மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அணில் தமிழகத்தில் வேலையை காட்டுகிறது என்று கூறினார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிமுக அமைப்பு தேர்தல் நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் அணில் வேலையை காண்பிக்க ஆரம்பித்து விட்டது.

சும்மா வாய் சவடால் விட்டுக்கொண்டிருக்கும் திமுக எதையும் செய்யவில்லை. இதனால் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. இதற்கு அணில்தான் காரணம் என்று சொல்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Thanthi Tv

Tags:    

Similar News