ஓ.சி.யில் பீர் தராதவர்களின் மண்டையை கூட்டாக உடைத்த தி.மு.க, வி.சி.க நிர்வாகிகள் கைது!

Update: 2022-05-15 11:48 GMT

ஓசி பீருக்காக கூட்டணி போட்டு பார்களில் புகுந்து மது பிரியர்களின் மண்டையை உடைத்து வந்த தி.மு.க., மற்றும் வி.சி.க. நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஓசி பிரியாணிக்காக தி.மு.க. குண்டர்கள் பல இடங்களில் பாக்சிங் செய்து சாப்பிட்டு வருவதை தமிழகமே அறிந்தது. தற்போது அந்த கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தில் அராஜகம் தலை தூக்கியுள்ளது. இதனால் சாதாரண கடை வைத்து நடத்துபவர்கள் அஞ்சி நடுங்கும் காலம் வந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் தி.மு.க. நிர்வாகி சரவணன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தமிழ்வளவன் என்பவர் கூட்டணி அமைத்து ஓசியில் பீர் வாங்கி குடித்து வருகின்றனர். அப்படி கொடுக்காதவர்களின் மண்டையை உடைத்து அட்டூழியங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வந்த நிலையில், இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது போன்று பலர் இன்னும் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ளதாக மது பிரியர்கள் கூறியுள்ளனர்.

Source: News J Tamil

Image Courtesy: 

Tags:    

Similar News