தி.மு.க அரசு இயங்குகிறதா என்று மக்கள் சந்தேகம் எழுப்பும் வகையில் இந்த ஆட்சி உள்ளது - அண்ணாமலை!

Update: 2022-05-18 11:12 GMT

தமிழகத்தில் தி.மு.க. அரசு இயங்குகிறதா என்று மக்கள் சந்தேகம் எழுப்பும் வகையில் இந்த ஆட்சி அமைந்திருப்பதாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஒரு ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளதாவது: அரசு இயங்குகிறதா என்று மக்கள் சந்தேகம் எழுப்பும் வகையில் அமைந்துள்ளது இந்த தி.மு.க. ஆட்சி. தினம்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு விரக்தியில் தீக்குளிக்கும் மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது! முதலமைச்சர் கவனம் செலுத்தி அரசு இயந்திரத்தை இயங்க வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த வீடியோவில் ஒரு குடும்பமே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தது. அப்போது அதன் குடும்ப தலைவர் பேசும்போது, எத்தனை முறைதான் ஜாதிச்சான்றிதழுக்காக அலைவது. இந்த சான்றிதழ் இல்லாததால் எனது மகள் தேர்வு எழுதுவதற்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை. எப்படியோ முதல் தேர்வுக்கு தலைமையாசிரியர் காலில் விழுந்து எழுத வைத்துள்ளேன். அடுத்த தேர்வுக்கு என்ன செய்வது நீங்களே சொல்லுங்கள் என்று கண்ணீர் விடுகின்றார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News