கள்ளக்காதல் சம்பவத்தில் தி.மு.க. பிரமுகர் கொலை: தலை இல்லாமல் திண்டாடும் போலீஸ்!

Update: 2022-05-21 13:29 GMT

சென்னை, மணலி செல்வ விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி 65. இவர் திருவொற்றியூர் வார்டு தி.மு.க. பிரதிநிதியாக உள்ளார். வட்டிக்கு பணம் கொடுத்தும் வருகின்றார்.

கடந்த 10ம் தேதி வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று சக்கரபாணியின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமரா மற்றும் செல்போன் சிக்னலை வைத்து தேடத்தொடங்கினர். அதன்படி ராயபுரம் கிரேஸ் கார்டன் 3வது தெருவில் தமீம்பானு என்பவர் வீட்டில் சக்கரபாணி கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் உடல் வைக்கப்பட்டிருந்தது. அதனை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தலை இல்லாமல் முண்டமாக தனித்தனி உடல் பாகங்கள் மட்டுமே இருந்தது. இதனால் போலீசாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

இது தொடர்பாக தமீம்பானுவிடம் விசாரணை செய்ததில், சக்கரபாணி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தாகவும், ஒரு கட்டத்தில் அவரது தொல்லை தாங்கமுடியால் வீடு மாறியதாகவும் தமீம்பானு கூறினார். புதிய வீட்டிற்கும் மாறிய பின்னரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறியுள்ளார். இதன் பின்னர் இப்படியே விட்டு வைத்தால், தனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு நல்லது இல்லை என்று தனது தம்பியுடன் சேர்ந்து தலையை அறுத்து எடுத்தோம். அதன் பின்னர் கை, கால்களை தனித்தனியாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி வைத்தோம்.

அதன் பின்னர் குடலை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வீசினோம். தலையை அடையாறு மலர் மருத்துவமனை அருகே கல்லைகட்டி ஆற்றில் வீசிவிட்டு திரும்பினோம். ஆனால் அதற்குள் போலீசாருக்கு தகவல் தெரிந்து எங்களை கண்டுப்பிடித்தனர் என்றனர். இதனையடுத்து ஆற்றில் வீசப்பட்ட தலை மிக முக்கியம் என்பதால், போலீசார் தீயணைப்பு துணையினருடன் சேர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். எவ்வளவு தேடியும் இன்னும் தலை கிடைக்காததால் போலீசார் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News