அரசு விழாவை தி.மு.க. பேரணியாக்கிவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் - மத்திய அமைச்சர் எல்.முருகன்

Update: 2022-05-27 13:48 GMT

பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து கொண்ட விதம் அவர் வகிக்கின்ற பதவிக்கு பொருத்தமற்றது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்திற்கு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று (மே 26) சென்னைக்கு வருகை புரிந்தார். அப்போது அரசு விழா மேடையை முதலமைச்சர் ஸ்டாலின் தி.மு.க. பேரணியை போன்று பயன்படுத்திக்கொண்டார் என்று பா.ஜ.க. குற்றம்சாட்டியிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் நடந்துகொண்ட விதம் அவர் வகிக்கும் பதவிக்கு பொருத்தமற்றது. வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் விழாவை, அவர் தி.மு.க.வின் தோல்வியை மறைக்க இப்படிச் செய்திருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அவரின் நடவடிக்கைகள் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: Vikatan

Image Courtesy: Dtnext

Tags:    

Similar News