"தெளிந்த பிறகு ட்வீட் டெலிட் செய்து விட்டீர்களா" டி.ஆர்.பி.ராஜாவுக்கு, சி.டி.ஆர்.நிர்மல்குமார் கேள்வி!

Update: 2022-05-28 07:41 GMT

தி.மு.க. ஐ.டி.விங் மாநில செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டி.ஆர்.பி.ராஜா, தனது தலைவர் ஸ்டாலின் பற்றி விமர்சனம் செய்பவர்களை மிதிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தி.மு.க. ஐ.டி.விங் மாநில செயலாளர் டி.ஆர்.பி. ராஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கருத்து சொல்லுங்கள்.. இல்ல நாங்க சொல்றது பொய் என்று கூட வாதாடுங்கள்.. நாகரீகமாக பதில் வரும். ஆனால் என் தலைவன் விமர்சிக்க உங்க எவனுக்கும் தகுதியில்ல. மீறி பேசுனா உங்கப்பனாவே இருந்தாலும் அடிப்போம்.. சாரி மிதிப்போம் என்று பதிவிட்டுள்ளார். ஒரு அரசியல் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்துக்கொண்டு இது போன்ற கருத்தை ட்விட்டரில் பதிவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. ஐ.டி.விங் தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தெளிந்த பிறகு டெலிட் செய்து விட்டீர்களா டி.ஆர்.பி.ராஜா.. தந்தையோ 90 சதவீதம் குனிந்து கும்பிடுவார் தேவை என்றால், இப்போதாவது இது போன்ற சந்தப்பவாதிகள் பற்றி கொத்தடிமைகள் புரிய வேண்டும். இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Twitter

Image Courtesy: Times Of India

Tags:    

Similar News