குற்றவாளிகள் எப்போது குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் - ஹெரால்ட்டு வழக்கில் சோனியா, ராகுலுக்கு ஜே.பி.நட்டா கேள்வி!

Update: 2022-06-02 06:49 GMT

குற்றவாளிகள் எப்போதுமே குற்றத்தை ஒப்புக் கொள்வதில்லை என்று சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நேஷனல் ஹெரால்ட் பற்றிய வழக்கில் சோனியாவும், ராகுலும் விசாரணைக்கு வருகின்ற 8ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனுக்கு காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவித்தது. கடந்த 2015ம் ஆண்டு மூடப்பட்ட வழக்கை மறுபடியும் வேண்டும் என்றே மத்திய அரசு விசாரணைக்கு எடுப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது.

இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் விதமாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர்களின் முகத்தில் இருக்கின்ற கறையைத் துடைக்காமல் கண்ணாடியில் உள்ள கறையைத் துடைக்க முயற்சி செய்கின்றனர். எப்போதுமே ஒரு குற்றவாளி தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்வதில்லை. இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News