செய்தியாளர்களை அவன், இவன் என ஒருமையில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு!

Update: 2022-06-08 02:14 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை அவன், இவன் என ஒருமையில் பேசும் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் செய்தியாளர்களை ஒருமையில் பேசியதற்கு அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இவரது கருத்துக்கு இதுவரையில் எந்த பத்திரிகையாளர்களும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Full View

ஆனால் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சில கருத்தை கூறியதும் மற்ற ஊடகங்களை சேர்ந்தவர்களும், யூடிபர்களும் போராட்டத்தில் குதித்ததை காண முடிகிறது. பத்திரிகையாளர்கள் என்றால் அனைத்திற்கும் ஒரே மாதிரியான குரல் கொடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாகும்.

Source: Thamari Tv

Image Courtesy: Hindu Tamil

Tags:    

Similar News