மகனை எப்படி விமர்சிக்கலாம் - தி.மு.க. எம்.பி.செந்தில்குமாரை கடிந்து கொண்ட டி.ஆர்.பாலு!

Update: 2022-06-14 12:03 GMT

தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் செயல்பாடுகளை வெளிப்படையாக விமர்சனம் செய்த தருமபுரி தி.மு.க. எம்.பி.செந்தில்குமாரை அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தற்போது கடிந்து கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பொதுவெளியில் வைத்தார். இதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு சில பதிவுகளை வெளியிட்டது. இதற்கு ஒரு சில நூறு பேர் மட்டும்தான் லைக் மற்றும் ஷேர் செய்திருந்தனர்.

இதனால் கோபமடைந்த தருமபுரி தி.மு.க. எம்.பி., செந்தில்குமார் தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியின் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கின்ற உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஒரு பதிவுக்கு சில மணி நேரங்களில் ஒரு லட்சம் பேர் ஆதரவு அளித்திருக்க வேண்டும். அதே நேரத்தில் அண்ணாமலைக்கு எதிரான பதிவுக்கு சில மணி நேரங்களில் வெறும் 240 லைக்குகள் மட்டுமே வந்துள்ளது என்று கடுமையாக சாடினார்.

இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரான தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு மகன் ராஜா செயல்படாத நிர்வாகிகள் மீது நடவடிக்கைகள் பாயும் என பதில் கொடுத்திருந்தார். அதற்கு 24 மணி நேரமும் என்ன செய்தனர் என்பதை தினந்தோறும் மாலை 6 மணி ஆன உடன் அணியின் நிர்வாகிகளிடம் பெற வேண்டும்.

இதனை ஒழுங்காக செய்தால் மட்டுமே தி.மு.க. மீது பற்றுள்ள பெரும் போர் படையினை உருவாக்க முடியும் என்று எம்.பி.செந்தில்குமார் சில ஆலோசனைகளை கூறியிருந்தார். இதற்கு மத்தியில் மகனின் பொறுப்பில் உள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி செயல்பாடுகளை இப்படி பொதுவெளியில் விமர்சனம் செய்த செந்தில்குமார மீது டி.ஆர்.பாலு கடுமையான கோபத்தில் இருப்பதாகவும், இது பற்றி செந்தில்குமார் மீது கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. கட்சியின் தலைவரான ஸ்டாலினிடமும் புகார் கூறப்பட்டுள்ளதாம்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News