விருதுநகரில் முதலமைச்சர் ஸ்டாலினை பற்றி அவதூறு பரப்பியவர் கைது!

Update: 2022-06-21 07:44 GMT

விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து பரப்பியவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் சமூக வலைதளங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து பரப்பியுள்ளதாக, தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய சைபர் க்ரைம் போலீசார் நாகராஜ் அவதூறு கருத்துக்கள் பரப்பியதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் போலீஸை வைத்து கைது செய்து வருவதாக கூறியுள்ளனர்.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News