போலீசாரின் கன்னத்தில் பளார் விட்ட கம்யூனிஸ்ட் தோழர் - போராட்டம் என்ற பெயரில் அக்கிரமம்

Update: 2022-06-24 11:35 GMT

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது ரயில் நிலையத்துக்குள் நுழையவிடாமல் தடுத்த ஆயுதப்படை ஏட்டுவை, மாவட்ட செயலாளர் ஒருவர் கன்னத்தில் பளார் என்று அறைந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

புதிதாக கொண்டுவரப்பட்ட அக்னிபத் திட்டத்திற்கு எதிராக மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாக ரயில் நிலைத்தை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களை ரயில் நிலையத்துக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சிலர் போலீசாரை தாண்டி ரயில் நிலையத்திற்குள் ஓடினர். அப்போது புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரனின் சட்டையை ஆயுதப்படை தலைமை போலீஸ் மணிராஜ் என்பவர் பிடித்து இழுத்தபோது கிழிந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரமுகர் போலீசாரின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். இந்த தாக்குதல் சம்பவம் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News