இந்து பெண்களை பற்றிய அவதூறு - திருமாவளவனை எம்.பி பதவியை பறிக்க எழும் கோரிக்கை

Update: 2022-07-02 08:15 GMT

இந்து பெண்களை அவதூறாக பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை உடனடியாக எம்.பி., பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீ வில்லிபுத்தூரில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயண பொதுக்கூட்டத்தில் காடேஸ்வர சுப்ரமணியன் பங்கேற்றார். அதன் பின்னர் அவர் பேசியதாவது: ராஜஸ்தான் மாநிலத்தில் டைலர் கொலை செய்யப்பட்டதில் வெளிநாட்டு தீவிரவாதிகளின் சதி செயல் உள்ளது. உடனடியாக பயங்கரவாதிகளை அடக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் இருக்கின்றனர். இதன் காரணமாக கலவரத்தை உருவாக்கவும் முயற்சி செய்கின்றனர்.

மேலும், இந்து பெண்களை அவதூறாக பேசும் திருமாவளவனை உடனடியாக எம்.பி., பதவியில் இருந்து நீக்க வேண்டும். தமிழகத்தில் கோயில்களை நிர்வகிப்பதற்கு தனியாக வாரியம் உருவாக்க வேண்டும். உடனடியாக கோயில் நிலங்களை அமைச்சர் சேகர்பாபு மீட்க வேண்டும். வரி கட்டாமல் இருப்பவர்களிடம் இருந்து வரியை வசூல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News