பா.ஜ.க.வில் இணையும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.!

Update: 2022-07-11 13:16 GMT

ஹரியானாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., குல்தீப் பிஷ்னோய் நேற்று (ஜூலை 10) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க., தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோரை சந்தித்தார். இதனால் அவர் பா.ஜ.க.வில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானால் தற்போது பா.ஜ.க., தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அங்கு முதலமைச்சராக மனோகர் லால் கட்டார் வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., குல்தீப் பிஷ்னோய் கட்சியின் கொறடாவின் உத்தரவை மீறி பா.ஜ.க.விற்கு வாக்களித்தார். இதனால் அவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று (ஜூலை 10) டெல்லிக்கு சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ., குல்தீப் பிஷ்னோய், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

இதனை தொடர்ந்து அவர் பேசுகையில், அமித்ஷாவையும், நட்டாவையும் சந்தித்ததை மிகவும் பெருமையாக கருதுகிறேன். எனவே அவர்கள் அளித்த அங்கீகாரம் எனக்கு பெருமை அளிப்பதாக உள்ளது என்றார். இவரின் பேட்டியால் எப்போது வேண்டுமானாலும் பா.ஜ.க.வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News