"ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் வரை ஓயமாட்டோம்" களத்தில் இறங்கிய இந்து மக்கள் கட்சி!

Update: 2022-07-11 14:26 GMT

தூத்துக்குடி:  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்  கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத்  வெளியிட்ட டுவிட்டர் பதிவில்: தூத்துக்குடியில் பிரிவினைவாதிகளின் சதித்திட்டம் காரணமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக இந்து மக்கள் கட்சி முன்னின்று இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து கோரிக்கை விடுக்கப்பட்டது. விரைவில் நல்லது நடக்கும். விரைவில் அதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ் உறுதியளித்தார்.

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் வரை இந்து மக்கள் கட்சியின் நடவடிக்கை தொடரும் .

இந்து மக்கள் கட்சியின், இத்தகைய  முன்னெடுப்புகள் மூலம்,  மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை இயக்கப்படுமா என்ற கேள்வியும் எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது.

Tags:    

Similar News