முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியுடன் உயிரிழந்த போலீஸ் தர்மன் பேத்திக்கு உதவிய பா.ஜ.க

Update: 2022-07-12 08:00 GMT

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியுடன் உயிரிழந்த போலீஸ் தர்மன் பேத்திக்கு பேட்மின்டன் போட்டியில் பங்கேற்பதற்காக தமிழக பா.ஜ.க., உதவி செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குண்டுவெடித்தது. இதில் அவருடன் சேர்த்து காவலர்கள் மற்றும் சில பொதுமக்களும் உயிரிழந்தனர். அதில் உயிரிழந்தவர்களில் தர்மன் என்ற போலீசாரும் ஒருவர் ஆவார். அவரது பேத்தி அக்ஷிதா 14, தேசிய பேட்மின்டன் வீராங்கனை. இவரது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் தள்ளப்பட்டது. இதனிடையே அவர் தேசிய போட்டியில் பங்கேற்பதற்கு போதுமான பணம் இன்றி சிரமப்பட்டு வந்துள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்த தமிழக பா.ஜ.க., சிறுமிக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளது. அதாவது எங்கு சென்றாலும் அதற்கான பயணம் செல்வை ஏற்பதாகவும் அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி சர்வதேச பயிற்சியும் வழங்குவதாகவும் அதற்கான உபகரணங்களையும் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான கடிதத்தை தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் வைத்து அக்ஷிதா மற்றும் அவரின் குடும்பத்தாரிடம் வழங்கினார். அப்போது பா.ஜ.க., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News