முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனாவில் இருந்து குணமடைய வேண்டும் - அண்ணாமலை

Update: 2022-07-12 13:51 GMT

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள செய்தியை அறிந்தேன். அவர் பூரணமாக குணமடைந்து மீண்டும் மக்கள் சேவைக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக அவரே தன்து ட்விட்டர் மூலம் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முககவசம் அணிவதோடு, தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு விரைந்து வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twitter

Tags:    

Similar News