செய்தியாளர்கள் சந்திப்பில் தி.மு.க அமைச்சர் மூர்த்தி பகலிலேயே உறக்கம்!

Update: 2022-07-27 10:58 GMT

மதுரை: செய்தியாளர்கள் சந்திப்பில் தி.மு.க அமைச்சர் மூர்த்தி தூங்கி வழிந்த காட்சிகள், இணையவாசிகளால் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.


தமிழகத்தில் கடந்த ஓராண்டாக தி.மு.க அமைச்சர்கள், M.LAகள் M.Pகள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்களின் செயல்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது. அதேபோல் "பொதுமக்களிடமும் மாநில அரசு மிகப்பெரும் அதிருப்தியை பெற்று வருகிறது" என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துக் கூறி வருகின்றனர். 


இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், அமைச்சர் PTR பழநிவேல் தியாகராஜன் மற்றும் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டனர்.


அமைச்சர் மா சுப்ரமணியன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தபோது, அமைச்சர் மூர்த்தி தூக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். இக் காட்சிகளை செய்தியாளர்கள் படம் பிடித்தனர். இதனையறிந்து உடனடியாக அமைச்சரின் தூக்கத்தை அமைச்சரின் உதவியாளர் கலைத்தார்.


செய்தியாளர்கள் சந்திப்பில், தி.மு.க அமைச்சர் உறங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Full View


Tags:    

Similar News