ஒலிம்பியாட் போட்டி விளம்பர பதாகைகளில் ஒட்டப்பட்ட பிரதமர் படத்தின் மீது, கருப்பு மை பூசிய தி.க நபர்!

Update: 2022-07-28 02:00 GMT

சென்னை: பிரதமரின் உருவப்படத்தின் மீது, திராவிட கழகத்தைச் சேர்ந்த ஒருவரால், கருப்பு மை பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் நாளை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆரம்பமாகிறது. இதனைத் தொடங்கி வைக்க நாளை பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார்.


செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விளம்பரப் பதாகைகளில், பிரதமர் மோடியின் புகைப்படத்தை புறக்கணித்துவிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலினின் புகைப்படம் மட்டும் இடம் பெறச் செய்து, பிரதமரை அவமதிக்கும் அரசியலில் இறங்கியது தி.மு.க அரசு.


இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திரு அமர் பிரசாத் ரெட்டி தலைமையில், பா.ஜ.க''வினர் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பர பதாகைகளில் பிரதமரின் புகைப்படத்தையும் ஒட்டினர்.


அப்படி ஒட்டப்பட்ட பிரதமரின் புகைப்படத்திற்கு, திராவிட கழகத்தைச் சேர்ந்த சசிக்குமார் என்ற நபர்  கருப்பு மை பூசி அவமரியாதை செய்துள்ளார். இச் சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியதை தொடர்ந்து,உடனடியாக திராவிட கழகத்தைச் சேர்ந்த சசிக்குமார் என்ற அந்த நபரை காவல்துறை கைது செய்துள்ளது.


Full Viewo




Tags:    

Similar News