குண்டு வீச்சுக்கு காரணம் பா.ஜ.க என்ற இடதுசாரிகள் - சிக்கிய எஸ்.டி.பி.ஐ கட்சியினர்

Update: 2022-09-26 15:22 GMT

கோவை குனியமுத்தூர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்து முன்னணி நிிர்வாகி காருக்கு தீ வைத்தது மண்ணெண்ணெய் குண்டு வீசிய கலவர சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து பேட்டியளித்த காவல்துறை ஆணையர், 'சி.சி.டி.வி காட்சிகளின் உதவியுடன் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த ஜேசுராஜ், இலியாஸ் ஆக இருவரை கைது செய்ததாக கூறினார்.


திருமாவளவன், சீமான் போன்றோர் பா.ஜ.கவினர் காரணமாக இருப்பார்கள் என கூறி வந்த நிலையில் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருப்பது இடதுசாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Source - Polimer

Similar News