முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் - அண்ணாமலை விடுத்த சவால் ஏன் தெரியுமா?

Update: 2022-09-28 12:36 GMT

முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.


திண்டுக்கல் அடுத்துள்ள குடைப்பாறைப்பட்டி பகுதியில் உள்ள பாஜக மாநகர மேற்கு மண்டல தலைவர் செந்தில் பால்ராஜ் குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்களை கடந்த 25ம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சம்பவம் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் அங்கிருந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், பாரதிய ஜனதா கட்சியின் மீது உள்ள காழ்ப் புணர்ச்சி காரணமாக இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றது. மேலும், பாஜக இந்து அமைப்பினர் உள்ளிட்டவர்களின் உடமைகள் சூறையாடப்படும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். பாஜகவினரின் தொடர் போராட்டம் காரணமாக ஆங்காங்கே நடைபெற்ற தீவைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசும் போது, கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், என்னை கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார் முடிந்தால் என்னை கைது செய்யட்டும் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.



Source - Asianet News

Similar News