'நீங்க நல்லா இருப்பீங்களாடா' கப்பல் வியாபாரம் போன விரக்தியில் புலம்பிய டி.ஆர்.பாலு - அண்ணாமலை அடியின் விளைவு!

வயிறு எரிஞ்சு சொல்ற நீங்க நல்லா இருக்க மாட்டீங்க! என சாபமிடும் அளவிற்கு திமுக எம்.பி டி.ஆர்.பாலு சேது சமுத்திர திட்டத்தால் மிகவும் ஆத்திரமடைந்துள்ளார்.

Update: 2023-01-29 01:17 GMT

வயிறு எரிஞ்சு சொல்ற நீங்க நல்லா இருக்க மாட்டீங்க! என சாபமிடும் அளவிற்கு திமுக எம்.பி டி.ஆர்.பாலு சேது சமுத்திர திட்டத்தால் மிகவும் ஆத்திரமடைந்துள்ளார்.

தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சிகாலத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை அமல்படுத்துவதற்காக ஒப்பந்தம் போடப்பட்டு சேது சமுத்திர திட்டம் துவங்கியது! பின்னர் சில அரசியல் காரணங்களுக்காக சேது சமுத்திரத் திட்டம் கைவிடப்பட்டது, தற்பொழுது மீண்டும் சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என திமுக தனது அரசியல் நிலைப்பாட்டை மெதுவாக துவங்கியது உடனே தமிழக பாஜக அதனை எதிர்க்க துவங்கியது.

குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சேது சமுத்திரத் திட்டம் என்பது இன்னமும் முறையான திட்டம் என நிரூபிக்கப்படவில்லை, இது கடலில் மணலை எடுத்து மீண்டும் கடலுக்குள்ளே போடுவது போன்றதாகும், இதனால் திமுக எம்.பி கனிமொழி எம்.பி டி.ஆர்.பாலு ஆகியோர் நடத்தும் கப்பல் கம்பெனிகள் மட்டும்தான் லாபம் சம்பாதிக்கும் தவிர இதனால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை என சேது சமுத்திரத் திட்டத்தின் பின்னணியில் உள்ள திமுகவின் திட்டத்தை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.

அதனை தொடர்ந்து சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் வர வேண்டும் என திமுக அரசு தீர்மானம் கொண்டு வந்தது. அது மட்டுமல்லாமல் மீண்டும் சேது சமுத்திர திட்ட வேண்டும் என்ற பேச்சையும் துவங்கி உள்ளது. இந்த நிலையில் மதுரையில் நடைபெற்ற திராவிடர் கழக திறந்தவெளி மாநாட்டில் பேசிய எம்.பி டி.ஆர்.பாலு சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்தியவர்கள் ஒருபோதும் நல்லாவே இருக்க மாட்டார்கள் என சாபம் விடும் அளவிற்கு வயிறு எரிந்து பேசியுள்ளார்.

சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி மதுரையில் திராவிட கழகம் நடத்திய திறந்தவெளி மாநாட்டில் திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு கலந்து கொண்டார், திராவிடர் கழக வீரமணியும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய எம் பி டி ஆர் பாலு, தமிழர்களின் பாவம் பொல்லாதது, வயிறு எரிஞ்சு சொல்றேன் மீண்டும் பாஜகவால் வெற்றி பெற முடியாது, நீங்கெல்லாம் நல்லா இருப்பீங்களா' என பாஜகவினருக்கு மேலும் சாபம் விட்டார். அது மட்டுமில்லாமல் என்னால் தவறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது, எங்கே தவறு நடக்கிறதோ அங்கே கோபமாக மாறுவேன் அப்டின்னு பேசினார்.

மேலும் கப்பல் கம்பெனி ரகசியம் வெளியே வந்த கோபத்தில், நான் சாபம் விட்டால் பலிக்காதா? யாராவது என்னையோ என் தலைவர் வீரமணியை சீண்டினாலோ, தாக்க வந்தாலோ நான் கையை வெட்டுவேன் என பகிரங்கமாக மிரட்டல் வேறு விடுத்தார் திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசினார்.


சேது சமுத்திர திட்டத்தால் டி.ஆர்.பாலு நடத்தும் கப்பல் கம்பெனி தான் லாபத்தில் வரும் என அண்ணாமலை பேசியதற்கு தமிழகத்தில் அடுத்தபடியாக உடனடியாக ஒரு மேடையில் வாய்ப்பு கிடைத்தவுடன் டி.ஆர்.பாலு தனது வயித்தெரிச்சலை வெளிக்காட்டியுள்ளார்.

Similar News