அண்ணாமலைக்கு சிக்னல் கொடுத்த அமித்ஷா - திருமாவளவனின் அரசியல் அஸ்திவாரத்தை அசைக்க துவங்கிய பா.ஜ.க
அண்ணாமலையை உள்துறை அமைச்சர் அமித்ஷா தட்டிக் கொடுத்ததன் காரணமாக விடுதலை சிறுத்தைகளை அதிகம் அடிக்க துவங்கியிருக்கிறார்.
சமீபகாலமாக விடுதலை சிறுத்தைகள் பாஜக இடையேயான மோதல் முற்றியுள்ளது. கருத்து ரீதியாக, அரசியல் ரீதியாக விடுதலை சிறுத்தைகள் பாஜகவை பற்றி கருத்துக்கள் கூறுவதும், பாஜகவினர் அதற்கு பதிலடி கொடுப்பதும் தொடர்கிறது. இந்த நிலையில் திருமாவளவன் கடந்த வாரம் பாஜக பற்றி குறிப்பிடுகையில் ஒருபோதும் பாஜகவுடன் விடுதலை சிறுத்தைகள் கூட்டணி வைக்காது என கூறினார். மேலும், 'சிறுத்தை தன் உடம்பில் உள்ள கரும்புள்ளிகளை கூட மாற்றிக்கொள்ளுமே தவிர, பாஜக தன்னுடையை கொள்கையை மாற்றிக் கொள்ளாது.. பாஜகவின் சங்பரிவாரர்கள்ன் புத்தி ஒருபோதும் மாறாது.. அது சாதீயவாத புத்தி.. அது சனாதன புத்தி.. அது மாறவே மாறாது.. அந்த பாஜகவின் அரசின் கொள்கை, பேச்சுக்களைத்தான் எதிர்க்கின்றோம்... அதனால் இந்துக்களுக்கு எதிரானவர்கள் நாங்கள் இல்லை. அதேபோல் பாமகவின் அரசியலுக்கு எதிரானவர்கள் என்றாலும், ஒட்டுமொத்த வன்னியர்களுக்கும் எதிரானவர்கள் இல்லை' என்றார் திருமாவளவன்.
திருமாவளவன் இப்படி ஆவேசமாக பேசிய அடுத்த இரு தினங்களில் அண்ணாமலை அதற்க்கு பதிலடி தரும் விதமாக, 'தி.மு.க.விலிருந்து விடுதலைச் சிறுத்தைகளை நீக்குவதற்கு முன்பாக தாமே வெளியேறும் முடிவுக்கு திருமாவளவன் வந்திருக்கிறார். அவர் தைரியமாக வெளியே வரட்டும். திருமாவளவன் அவர்களின் கண்முன்னாலேயே விசிகவின் கோட்டையாக சொல்லப்படும் கடலூர் மாவட்டத்திலேயே பாஜக நன்றாக வளர்ந்து வருகிறது. 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அவரது தொகுதியில் திருமாவளவன் டெபாசிட் கூட வாங்க முடியாது' என அண்ணாமலை ஆக்ரோஷமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை குறிப்பாக திருமாவளவனை தாக்கி பேசினார்.
இப்படி இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை பாஜக குறிப்பாக அண்ணாமலை தாக்கி பேசுவதற்கு பின்னாடி அமித்ஷா இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் டெல்லி சென்று வந்த அண்ணாமலைக்கு ரகசிய அசைன்மென்ட் கொடுக்கப்பட்டதாகவும் அதன் பின்னணியில் இடதுசாரி கட்சிகள் குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சியினர் பாஜக சித்தாந்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்துதல், அவதூறு பரப்புதல், மோடி எதிர்ப்பு அலையை மக்கள் மத்தியில் உருவாக்குதல் போன்றவற்றை தமிழகத்தில் செய்துவருகின்றன.