ஆளுநர் விவகாரத்தில் ஆபத்தை தொட்ட திமுக - விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!

Update: 2023-04-13 12:32 GMT

அமைதியாக அரசியலமைப்பு படி நடந்த ஆளுநரை திமுக தற்போது சீண்டி பார்த்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலய த்துக்கு போராட்டத்திற்கு பின்னால் இருந்தவர்கள் சிலர் வெளிநாட்டு நன்கொடையை பெற்றுள்ளனர் ஆனால் இந்த போராட்டத்தில் மடிந்தது பொதுமக்களே, என்று ஆளுநர் கூறிய கருத்திற்கு திமுக தொடர்ந்து கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறது, ஆளுநர் இந்த ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு பின்னால் இருந்த சதியை பற்றி எந்த ஆதாரமும் இல்லாமையா சொல்லி இருப்பார், அதுவும் இந்த சதியை சிவில் சர்வீஸுக்கு தயாராகும் மாணவர்கள் முன்னாடி சொல்லி இருக்கிறார் அப்படி கூறும் பொழுது ஆளுநர் கண்டிப்பாக ஆதாரம் வைத்து தான் இதைப் பற்றி கூறியிருப்பார். ஆனால் இதைப் புரிந்து கொள்ளாமல் துரைமுருகன் அவர்கள் ஆளுநரை கேலி செய்ததுடன் அவர் திரையிட்ட ஒரு படத்தைப் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆளுநர் ஸ்டெர்லைட் போராட்டத்தைப் பற்றி பேசுகையில் யாரும் பசி பட்டினியோடு நீண்ட காலம் வாழ முடியாது இந்த பிரச்சினையை பற்றி ஆய்வு செய்யும்பொழுது தான் இந்த போராட்டத்துற்கு பின்னாடி இருக்கிறவங்களுக்கு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இருந்து பெரிய அளவு நன்கொடை வருகிறது என்பது தெரிய வந்தது என்று சொல்லி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக திமுகவினர் பல விமர்சனங்களையும் கண்டனங்களின் தெரிவித்து வருகின்ற வேலையில் தற்போது துரைமுருகன் ஆளுநரை விமர்சித்திருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள் பற்றிய வீடியோ ஒன்றை ஆளுநர் திரையிடும் பொழுது அதைப் பற்றி கேலி கிண்டல் செய்ததுடன் மட்டுமல்லாமல், இந்த படம் எந்த அப்பன் வீட்டு பணத்திலிருந்து வெளியிடப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார், திமுகவினர் தொடர்ந்து இப்படியே தன்னுடைய விமர்சனங்களை செய்து கொண்டிருந்தால், திமுக கட்சிக்கு பெரிய ஆபத்தாக முடியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


மாறி மாறி திமுக வினர் ஆளுநருக்கு எதிராக பேசி வருகிறார்கள் இது முதல்வர் ஸ்டாலினுக்கும் இக்கட்சியின் நிலைக்கும் தான் பெரிய ஆபத்து என பாஜக மூத்த தலைவர் எச் ராஜா எச்சரித்திருந்ததையும் மறந்துவிட்டு திமுக இப்படி பேசுவது அக்கட்சிக்கு தவறானதாக போய் முடியும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Similar News