குனிய வைத்து முதுகில் குத்திய தி.மு.க! மக்கள் நீதி மய்யத்துக்கு காங்கிரஸ் கொடுத்த சிக்னல்! அவசர ஆலோசனையில் கமல்!

Update: 2021-03-07 01:00 GMT

தமிழக அரசியலில் திமுக - காங்கிரஸ் இடையே பனிப்போர் வெடித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யத்துக்கு காங்கிரஸ் கொடுத்த சிக்னல் காரணமாகப் பிரச்சாரக் கூட்டத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு, கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் கமல் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு காலத்தில் தேசிய கட்சியாக கம்பிரமாக நின்ற காங்கிரஸ், "கூடா நட்பு கேடாய் முடியும்" என்பது போல, திமுகவுடன் கூட்டணி சேர்ந்து, தன்னுடைய நிலையை தாழ்த்திக்கொண்டது. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்கலங்கிக் கூறும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதை கேள்விக்குள்ளாகியது.

இந்த சூழலில், மக்கள் நீதி மய்ய கட்சி பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் பகிரங்கமாக காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் இன்று மாலை பிரச்சாரத்தில் இருந்த கமல் தரப்புக்கு காங்கிரஸிடமிருந்து அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து உடனடியாகப் பிரச்சாரத்தில் பேசுவதைப் பாதியிலேயே விட்டுவிட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை என கமல் கிளம்பிச் சென்றுவிட்டார். மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை மூலம் திமுகவுக்கான எச்சரிக்கையை காங்கிரஸ் விடுக்கிறதா? அல்லது மக்கள் நீதி மய்ய கூட்டணிக்கே செல்கிறதா என்பது அடுத்தடுத்த நிகழ்வுகள் மூலமே தெரியவரும். 

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, திடீர் திருப்பங்கள், எதிர்பாராத பரபரப்புகளுடன் தமிழக அரசியல் களம் நகர்ந்து கொண்டிருப்பதால், இந்த முறை தேர்தல் ஜுரம் பயங்கர சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Similar News