'மோடிக்கு எதிரான தோற்றம் தமிழகத்தில் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு வருகிறது' - அம்பலப்படுத்தும் தி.மு.க எம்.பி

Update: 2022-04-21 11:00 GMT

'மோடிக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ச்சியாக தவறான தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் விரைவில் மோடி குறித்து புரிந்து கொள்வார்கள்' - என இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பி'யுமான பாரிவேந்தர் கூறியுள்ளார்.


திருச்சி புத்தூர் பகுதியில் பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் புதிய தலைமை அலுவலகத்தை அச்சங்கத்தின் நிறுவன தலைவரும், தி.மு.க நாடாளுமன்ற பெரம்பலூர் தொகுதி உறுப்பினருமான டாக்டர்.பாரிவேந்தர் திறந்து வைத்தார். இந்த விழாவில் ஐ.ஜே.கே பொதுச் செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர் கூறியதாவது, "மகாத்மா காந்தியை போன்றவர் இந்திய பிரதமர் மோடி நாட்டின் முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும் உழைக்கிறார். அவருக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ச்சியான தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது தமிழக மக்கள் விரைவில் மோடி குறித்து புரிந்து கொள்வார்கள். அவரை நேசிப்பார்கள், ஏற்றுக் கொள்வார்கள்" எனக் கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது, "இந்தியாவின் பெருமையை பாதுகாக்க நாட்டுப் பற்று கொண்டு நாட்டிற்காக உழைத்து வரும் பெருமகன் மோடி இதே தமிழகம் மோடியை புகழ்ந்து பாராட்டும் காலம் விரைவில் வரும் அது வெகு தொலைவில் இல்லை" எனவும் கூறினார்.


Source - News 18 Tamil Nadu

Tags:    

Similar News