என்னை கேட்காம மோடி திட்டத்தில் வீடு கட்டக்கூடாது - "நேரில் வா உன் வாயை உடைக்கிறேன்" தி.மு.க கவுன்சிலரின் கணவர் அராஜகம்!

Update: 2022-11-21 07:49 GMT

என்னை கேட்காமல் மோடி திட்டத்தில் வீடு கட்டக்கூடாது. நான் தான் கவுன்சிலர்.உன் வாயை உடைப்பேன் என, ஒரு இளைஞருக்கு மொபைல் போனில் மிரட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார் மதுரை 42வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் செல்வியின் கணவர் கார்மேகம்.

மணிகண்டன் என்பவர் மோடி திட்டத்தில் வீடு கட்டியுள்ளார். அவருடைய பெற்றோரை மிரட்டிய கார்மேகம் பணம் தரச்சொல்லி கேட்டிருக்கிறார். 

அதற்கு விசாரிக்க செல்போனில் அழைத்த மணிகண்டனை கார்மேகம் தகாத வார்த்தையில் திட்டி உள்ளார். 

வார்டில் என்னை மீறி எதுவும் செய்யக்கூடாது. நீ வேறு வார்டாக இருந்தாலும், இப்போது ஏரியா மாறிவிட்டது. என் கண்ட்ரோல் கீழ் தான் வரும். 

வார்டுக்குள் என்னை கேட்காமல் வீடு கட்டக் கூடாது. நீ நேரில் வா உன் வாயை உடைக்கிறேன் என, மிரட்டியுள்ளார்.

மதுரையில் தி.மு.க., கவுன்சிலர்கள், அவர்களின் கணவர்கள், மிரட்டல், உருட்டல், வசூல் என களமிறங்கி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Input From: Dinamalar 

Similar News