மதுராந்தகம் தி.மு.க பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் அளவுக்கு அதிகமாக வெடித்த பட்டாசால் பெரும் விபத்து - 15 பேர் படுகாயம், 3 பேர் கவலைக்கிடம்!

Update: 2021-05-10 05:30 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தி.மு.க பிரமுகரின் இறுதி ஊர்வத்தில் அளவுக்கு அதிகமாக பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் சாலையில் சென்ற 15 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர் மேலும் பல பொருள்கள் எரிந்து நாசமாயின.


மதுராந்தகத்தை சேர்ந்த தி.மு.க முக்கிய பிரமுகர் ஒருவரின் இறுதி ஊர்வலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக எடுத்துசெல்லப்பட்டது. அப்பொழுது அந்த இறுதி ஊர்வலத்தில் அளவுக்கு அதிகமாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டன இதனால் அங்கு ஏற்பட்ட விபத்தில் அந்த வழியாக சென்ற சரக்கு வாகனம் ஒன்று இறுதி ஊர்வத்தில் புகுந்தது, மேலும் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரின் இரு சக்கர வாகனம் தீ பற்றி எரிந்தது.


மேலும் அந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞர் மீது பட்டாசு வெடித்ததில் இளைஞர் படுகாயமடைந்தார். மேலும் அந்த வழியாக சென்ற 15 பேர் படுகாயமடைந்தனர். அதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.


சர்வீஸ் சாலையில் கொண்டு சென்ற சவ ஊர்வலத்தை தேசிய நெடுச்சாலையில் கொண்டு சென்றது மட்டுமல்லாமல் அதிக அளவில் பட்டாசுகளை வெடித்ததே இந்த கோர தீ விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


ஆட்சிக்கு வந்து சில நாட்களே ஆன நிலையில் தி.மு.க'வினர் அராஜகத்தில் ஈடுபடுவதால் இது போன்ற விபத்துக்கள் நடைபெறுகின்றன என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Source - NEWS J

Similar News