ஒரு ஓட்டுக்கு ரூ.15000, தங்க காசு - தமிழகத்தை உலுக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கில் இதுவரை திமுக ஒரு ஆளுக்கு பதினைந்தாயிரம் ரூபாய் செலவு செய்து இருப்பதாகவும், தேர்தல் நெருங்கும் இடையில் ஒரு நபருக்கு ஒரு கிராம் கோல்டு காயின் கொடுக்க திட்டமிட்டு மொத்தமாக தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்தவர் தாங்க திருமகன் ஈ.வே.ரா இவர் இப்ப அறிவிச்சுருக்க ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன், திருமகன் ஈ.வே.ரா உடல்நலக்குறைவால காலமானதுனால ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதா அறிவிக்கப்பட்டது, உடனே தேர்தல் ஆணையம் வர பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் அறிவிச்சது தேர்தல் அறிவிச்சது மட்டும் இல்லாம உடனே அந்த இடத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு வந்துச்சு.
இந்த மாதிரி இருக்கிற நிலைமையில் இன்னும் கிட்டத்தட்ட ஒரு வருஷத்துல நாடாளுமன்ற தேர்தல் வரவேற்கும் நிலையில் இந்த ஈரோடு கிழக்கு தொகுதியோட இடைத்தேர்தல் ரொம்ப முக்கியமாகவே அனைத்து கட்சியாலும் பார்க்கப்படுது, இந்த நிலையில் தற்பொழுது ஈரோட்டில் அனைத்து கட்சியினரும் பரபர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார், அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கேயே தங்கி இருந்து கட்சியினரை முடுக்கிவிட்டு வேலை பார்த்து வருகிறார். மறுபுறம் நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் அவரது பேச்சாளர்கள் அங்கு வேலை செய்கின்றனர்.
மறுபுறம் திமுகவின் அமைச்சர்கள் 11 பேருடன் குழுவினருடன் செந்தில் பாலாஜி அங்கே முகாமிட்டுள்ளார். திமுக தரப்பிற்கு சற்று பின்னடைவு ஏற்படுத்துவது தெரிந்தும் இந்த வாரத்தின் இறுதியில் முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன் அமைச்சர் உதயநிதியும் அங்கு சென்று பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மையம் கமலஹாசனின் பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார்.