பூர்வாஞ்சல் விரைவு சாலை - 3 வருடத்தில் முடித்துக்காட்டிய பிரதமர் மோடி !

Update: 2021-11-17 10:45 GMT

மூன்றே வருடத்தில் இந்திய வரலாற்றில் முத்திரை பதிக்கும் ஓர் சாலையை மத்திய மோடி தலைமையிலான அரசு நிறைவு செய்து சாதித்துள்ளது.

சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உத்தர பிரதேச மாநிலத்தில் லக்னோவில் இருந்து தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் 341 கி.மீட்டர் நீளத்திற்கு விரைவு சாலை கட்டப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்பொழுது இந்த சாலையில் 3.2 கி.மீ. நீளத்திலான விமானப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.


இதன் திறப்புவிழாவான நேற்று பிரதமர் மோடி இந்த சாலையை திறந்து வைக்க ஹெர்குலஸ் ராணுவ விமானத்தில் வந்து இறங்கினார். பின்னர் சாலையை திறந்து வைத்தார். இதே சாலையில் இந்திய போர் விமானம் ஏ.என்.-32 தரையிறங்கியது, இந்த விமானம் அளவில் மிகப்பெரியதாகும்.


இதன் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது, "பூர்வாஞ்சல் விரைவு சாலைக்கு நான் 3 வருடத்திற்கு முன் அடிக்கல் நாட்ட வரும்போது, ஒருநாள் இங்கு விமானம் மூலம் வந்து தரையிறங்குவேன் என்று நினைத்து பார்க்கவில்லை'' என்றார்.


Source - Maalai malar

Tags:    

Similar News