வாரணாசி தொகுதியில் 3-வது முறை.. பிரதமர் நரேந்திர மோடி ஹாட்ரிக் வெற்றி..

Update: 2024-06-04 12:28 GMT

வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக பா.ஜ.க சார்பில் களமிறங்கி உள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 1.52 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று இருக்கிறார். உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, இன்று ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்தார். குறிப்பாக முதல் 4 சுற்று முடிவுகளிலும் பின்னடைவை சந்தித்த அவர் பின்பு எதிர்பாராத வெற்றியை பெற்று இருக்கிறார்.


அதைத்தொடர்ந்து அதிக ஓட்டுகளை பெற்ற பிரதமர் மோடி 6,11,439 ஓட்டுகளுடன் வெற்றியை கண்டார். இது காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 1.52 லட்சம் ஓட்டுகள் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாரணாசியில் தொகுதி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் போட்டியில் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சியான விஷயம் என்று பா.ஜ.க தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள்.


பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஹாட்ரிக் வெற்றிப் பெற்றதை பாஜக தொண்டர்கள் வெற்றிகரமாக கொண்டாடி வருகிறார்கள். இன்று இரவு 7 மணியளவில் டில்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகம் வரும் பிரதமர் மோடி, 3-வது முறையாக ஆட்சியமைப்போம் என்று அனைத்து தொண்டர்களிடமும் கூற இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News