தீவிரமாகிறது ஊரடங்கு - அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட 5 தீர்மானங்கள்!

Update: 2021-05-14 02:30 GMT

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம். நேற்று சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மொத்தமாக 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்ட 5 தீர்மானங்கள்.


தீர்மானம் 1 - தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு நல்கும்

தீர்மானம் 2 - அனைத்து விதமான கட்சி பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளை நிறுத்த தீர்மானம்

தீர்மானம் 3 - மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கள அளவில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து செயல்படும்

தீர்மானம் 4 - சட்டசமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனை குழு அமைக்க முடிவு

தீர்மானம் 5 - ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தீர்மானம்.

மேற்கண்ட 5 தீர்மானங்கள் நேற்றைய அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Similar News