"எங்களுக்கு ஒட்டு போடாம நீங்க நிம்மதியா இருக்க கூடாது" என தி.மு.கவினர் அராஜகம் செய்ததால் ஏரியாவை காலி செய்த 6 மீனவர் குடும்பங்கள்!

Update: 2021-05-10 07:00 GMT

சென்னை திருவெற்றியூர் அருகே வசித்து வந்த 60 மீனவர் குடியிருப்பு குடும்பங்களை தி.மு.க'வினர் விரட்டி அடித்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.


சென்னை திருவெற்றியூர் பலகைதொட்டி பகுதியில் 200'க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க'விற்கு வாக்களித்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி தி.மு.க'வினர் ஆத்திரமடைந்து அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு சென்று அசிங்கமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள பெண்களிடம் தகாத வார்த்தையில் பேசி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.


இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கால்துறையில் புகார் அளித்தனர். புகாரை விசாரிக்க வந்த காவல்துறை முன்னிலையிலே அவர்களை பரமாக தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து அச்சமடைந்த அப்பகுதி 60'க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பலகைதொட்டி பகுதியை விட்டு வெளியேறி பழவேற்காடு, தேரடி, வண்ணாரப்பேட்டை, திருவெற்றியூர், ராயபுரம் போன்ற பகுதிகளில் உள்ள தங்கள் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.


ஸ்டாலின் பதவி ஏற்று ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் தி.மு.கவினரின் இதுபோன்ற அராஜகங்கள் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Source : NewsJ

Similar News