புதுச்சேரியில் "தடுப்பூசி பிரச்சார வாரம்" கடைபிடிக்க Dr. தமிழிசை அறிவிப்பு.!

Update: 2021-06-08 01:30 GMT

தற்போது தமிழகம் மட்டும் அல்லாது புதுச்சேரியிலும் கொரோனாவின் பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் Dr. தமிழிசை சௌந்தர்ராஜன் கொரோனா தடுப்பூசி  செலுத்துவதை தீவிரப்படுத்துவதற்காக ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்தினார். 

தெலுங்கானா ராஜ்பவனில் இருந்து காணொளி வாயிலாக இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த ஒரு வார காலம் "தடுப்பூசி பிரச்சார வாரமாக" கடைபிடிக்க வேண்டுமஎன்று தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் கூறும்போது "புதுச்சேரியில் 100% கொரோனா தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்துவதற்காக தெலுங்கானா ராஜ்பவனில் இருந்து காணொளிக்காட்சியின் வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தீவிரப்படுத்த ஒரு வாரம் "தடுப்பூசி பிரச்சார வாரமாக" கடைபிடித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்" என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

Tags:    

Similar News