கூடுவாஞ்சேரியில் முன்கள பணியாளர்களுக்கு 'மோடி கிட்' வழங்கிய Dr. L. முருகன்!

Update: 2021-06-24 12:28 GMT

பா.ஜ.க கட்சியின் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய சியாமா பிரசாத் முகர்ஜியின் 68-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி தமிழ்நாடு பா.ஜ.க வின் மாநில தலைவர் Dr. எல்.முருகன் கமலாலயத்தில் அவரது திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 


இது குறித்து எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் "இன்று இந்திய தேசியத்தின் வழிகாட்டும் ஒளிவிளக்கு, டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு கமலாலயத்தில் மரியாதை செலுத்தினேன்." என்று பதிவிட்டிருந்தார்.


மேலும் பிரதமர் மோடியின் ஏழு ஆண்டு ஆட்சி நிறைவடைந்தது முன்னிட்டு, பா.ஜ.க கட்சி அதை சேவா தினமாக கொண்டாடி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள முன்கள பணியாளர்கள் மற்றும் எளியோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க மாநில தலைவர் எல். முருகன் முன்கள பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரேஷன் பொருட்கள் அடங்கிய "மோடி கிட்" அங்கு வந்த எளிய மக்களுக்கு வழங்கினார். 

Tags:    

Similar News