100 சதவிகித வாக்குப்பதிவு.. ராட்சத பலூனில் எழுதி பறக்க விட்ட திருவள்ளூர் ஆட்சியர்.!

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

Update: 2021-03-06 11:37 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் வகையில் நகராட்சி அலுவலகத்தில் உறுதி மொழியும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராட்சத பலூனையும் பறக்கவிட்டு மாவட்ட ஆட்சியர் பொன்னையா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதே போன்று மற்ற மாவட்டங்களிலும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Similar News