16 மணி நேரம் ஓய்வில்லாமல் உழைத்தார் ஜெயலலிதா: அப்பல்லோ மருத்துவர் பரபரப்பு தகவல்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார் என்று அப்பல்லோ மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Update: 2022-03-07 11:08 GMT

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார் என்று அப்பல்லோ மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அதிமுக தொண்டர்கள் குரல் கொடுத்த நிலையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிடப்பட்டது. அந்த விசாரணை இன்று வரை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர், முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறுவார். உடல் நலத்தை கருத்தில் கொண்டு ஓய்வெடுக்குமாறு தெரிவித்தோம். ஆனால் அவர் அதனை பொருட்படுத்தவில்லை என்ற கருத்தை கூறியுள்ளார்.

Source: Polimer

Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News